பேரன் பிறந்த போது மன்னிப்பு கேட்டால் வெளிவிடுகிறோம் என்று சுமார் 3269நாட்கள் சிறையில் கழித்த நேருவிடம் சொன்ன ஆங்கிலேய ஆதிக்கத்தை புறந்தள்ளியவர்,சாலையில் தூரத்தில் போலீஸ் வாகன வெளிச்சத்தில் இந்திரா கைகளில் தவழ்ந்த ராஜீவை கண்டு மகிழ்ந்து "இவர்கள் வெளிச்சத்தில் வாழ தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்" என கடிதம் எழுதினார்.
அந்த ஆசியஜோதியின் வெளிச்சத்தில் நேற்று (14-11-2022) அவர்தம் பிறந்ததினத்தில்,
எங்கள் பள்ளி குழந்தைகளின் கவிதை,பேச்சு,பாடல் மழையில் நனைந்து,அவர்களோடு நேற்றைய நாளினை கொண்டாடி மகிழ்ந்தோம்.

No comments:
Post a Comment