Thursday, 22 September 2022

சிறப்பு காய்ச்சல் முகாம்-2022

பரவி வரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக,
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி,
தமிழ்நாடு அரசின் சுகாதார துறையின்,பெரும்பனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் குழு இன்று (22-09-2022) நம் பள்ளியின் அனைதது மாணவர்களையும் பரிசோதித்து,காய்ச்சல் மற்றும் சளியுள்ள மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.மேலும் இது போன்ற பரவிடும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.

Wednesday, 14 September 2022

ICT Clubன் நன்றி

நம் பள்ளிக்கு எது தேவையென்றாலும் நாம் கேட்டவுடன் செய்யும் மனமும் வளமும் உடைய நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி,கும்பகோணம் மற்றும் அந்நிறுவனத்துடன் நம் பள்ளிக்கு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தி தந்து,தம் உறவினர்கள் மூலமாகவும் நம் பள்ளி தேவைகளை பூர்த்தி செய்யும் நம் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.இரா.சுதா மற்றும் அவர்தம் இணையர் திரு.மாருதிராமன்(CUB, KUMBAKONAM) அவர்களின் மகள் சுரபி ராமன் அவர்கள்,
நம் பள்ளியின்
 ICT Club ற்கு தேவையான Dual Lavlior contensor microphone மற்றும் 150MBpS திறன்கொண்ட TP Link WiFi dongle ஆகியவற்றை அளித்துள்ளார்கள்,அவர்கள் நம் பள்ளியின் ICT Club சார்பாகவும்,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் சார்பாக பெருநன்றியும் பேரன்பும்💐💐💐

Friday, 9 September 2022

தேசிய குடற்புழு நீக்க நாள்-2022


மாணவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான்,மனநலன் மிக்கவர்களாக இருக்கமுடியும்.அப்போது தான் அவர்களால் கற்றலில் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, தனது சுகாதாரத் துறையின் மூலம் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கல் மாத்திரைகளை விலையின்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நம் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் "தேசிய குடற்புழு நீக்கல் நாளான" இன்று 09.09.2022 பெரும்பனையூர் சுகாதார நிலைய செவிலியர் அவர்களால் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Thursday, 8 September 2022

தூய்மை வாரம்

தூய்மை இந்தியா திட்டத்தின்படி,கல்வி நிறுவனங்களில் தூய்மை வாரம் கடைப்பிடிக்க மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி  நம் பள்ளியில் தூய்மை சார்ந்த செயல்பாடுகள் தினமும் நடத்தப்படுகிறது.அதன் ஒரு நிகழ்வாக 3-8வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் பாட்டு போட்டி நேற்று(07.09.2022) நம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
மேலும் ஆசிரியர்கள் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Thursday, 1 September 2022

ஜெனிவா உடன்படிக்கை நாள் போட்டிகள்2022

நேற்று வட்டார அளவில், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக, ஜெனிவா உடன்படிக்கையை நினைவுகூறும் விதமாக நடத்தப்பட்ட போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றியும் பெற்றனர், போட்டிகளில் பங்கெடுத்த மற்றும் வென்ற மாணவர்களை பாராட்டிய போது,

மூன்றாமிடம் பெற்ற மாணவர்: பேச்சுப்போட்டி, ஜெ.ரஹோத்தமன் 8ம் வகுப்பு,
முயற்சி செய்தவர்கள்:
கட்டுரைப்போட்டி:ம.வைஷ்ணவி 8ம் வகுப்பு
ஓவியப்போட்டி:த.கவின்குமார் 7ம் வகுப்பு.

சுதந்திர தினம் 2022

எம் பள்ளியில் நடைப்பெற்ற 2022ஆம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் காணொளி தொகுப்பு 🇮🇳🇮🇳🇮🇳

https://youtu.be/TirVp2c6lv8