Friday, 9 September 2022

தேசிய குடற்புழு நீக்க நாள்-2022


மாணவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான்,மனநலன் மிக்கவர்களாக இருக்கமுடியும்.அப்போது தான் அவர்களால் கற்றலில் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, தனது சுகாதாரத் துறையின் மூலம் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கல் மாத்திரைகளை விலையின்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நம் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் "தேசிய குடற்புழு நீக்கல் நாளான" இன்று 09.09.2022 பெரும்பனையூர் சுகாதார நிலைய செவிலியர் அவர்களால் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment